ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சார்பாக டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தமிழகத்தைச் சேர்ந்த தேசிய செயலாளர் அப்துல் கபூர் மன்பயீ, தேசிய பொது செயலாளர் முஃப்தி ஹனீப் அஹ்ரார் காஸிமீ,தேசிய ஒருங்கினைப்பாளர் மெளலவி ஹாலிது ரஷாதி மற்றும் டெல்லியின் மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு குர்ஆன் வகுப்பு
ஒரே நாளில் குர்ஆன் கற்போம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மகத்தான நிகழ்ச்சி இமாம்கள் சக்தி பெறுவோம்! சமூகத்தை சக்தி படுத்துவோம்!! என்கிற உன்னத முழுக்கத்தொடு பயணிக்கும் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்அல் ஹம்துலில்லாஹ் திருவள்ளூர் மாவட்ட AIICஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சார்பில் ஓரே நாளில் குர்ஆன் கற்போம் நிகழ்ச்சி திருத்தணி இஸ்லாம் நகர் அஹ்மத் பின் ஹன்பல் பள்ளிவாசலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது இதில் ஆரம்பமாக ஹாபிழ் காரி யூசுப் ஹஜ்ரத் அவர்கள் கிராஅத் ஓதினார் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மகத்தான பணிகளை மக்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எடுத்துரைத்தார் மாநில செயலாளர் மெளலவி J முஹம்மது இப்ராஹிம் ஃபாஜில் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள்🕌"ஓரே நாளில் குர்ஆன் கற்போம்"🕌 பாடத்தை சாமானிய மக்களுக்கு நடத்தினார் அல் ஹம்துலில்லாஹ்அனைத்து மக்களுக்கும் அல்லாஹ் திருக்குர்ஆன் எந்த அளவுக்கு இலகு என்பதை காட்டித்தந்தான் அனைத்து மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி நாங்கள் இனி அல்லாஹ்விடம் பேசுவோம் என்று உறுதியளித்து சென்றார்கள்அல் ஹம்துலில்லாஹ் திருத்தணி இஸ்லாம் நகர் பள்ளி வாசல் இமாம் மெளலவி ஹாபிழ் முஹம்மது இலியாஸ் ஹஜ்ரத் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார் இறுதியில்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மெளலவி ஹாபிழ் H. அப்துல் காதிர் ஜைனி ஹஜ்ரத் அவர்கள் துஆவோடு கூட்டம் நிறைவுற்றது
நான் அறிந்த நபிகள் நாயகம் ஆவணப்படம்
நான்_அறிந்த_நபிகள்_நாயகம் ஆவணப்படம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் ஆண்டுதோறும் முஹம்மது நபி (ஸல்)அவர்கள் பிறந்த மாதத்தில் முஹம்மது நபி ஸல் அவர்களின் வாழ்வியலை அனைவருக்கும் கொண்டு செல்லும் விதத்தில் தொடர்பிரச்சாரம் செய்து வருகின்றோம். அதனடிப்படையில் இந்த வருடமும் புரட்சித்தூதர் முஹம்மது ஸல் என்ற தலைப்பில் வருகின்ற டிசம்பர் 2௦-2௦16 முதல் ஜனவரி 15 -2௦17வரை தொடர் பிரச்சாரம் செய்வதற்கு முடிவு செய்துள்ளோம். இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தலைவர்களின் பார்வையில் முஹம்மது (ஸல்)அவர்கள் என்ற நோக்கத்தில் நான் அறிந்த நபிகள் நாயகம் என்ற தலைப்பில் ஆவணப்படம் தயாரிக்க முடிவு செய்து அதற்காகாக பல அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக தலைவர்களை சந்தித்து நபி(ஸல்) அவர்களைப்பற்றி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதனை ஆவணமாக்கபட்டு வெளியிடப்பட்டது
மதுரையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாவட்ட செயற்குழு
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மதுரை மாவட்ட செயற்குழு மாட்டுத்தாவணி பள்ளி வாசலில் 11.04.2017 அன்று நடைபெற்றது அதில் ,1.வருகிற கோடைகாலத்தில் விளாச்சேரி, சர்வேயர் காலனி ஆகிய இரண்டு இடங்களில் கோடைகால பயிற்சி வகுப்புகள் நடந்துவது.2.இமாம்ஸ் கவுன்சில் சார்பாக செயல்படும் இப்னு ஸபீல் என்ற வழிபோக்கர்களுக்கு உதவி செய்யும் திட்டத்தை மாவட்டம் தோறும் அறிமுகம் செய்வது.3.டெல்லில் உள்ள ஜிந்தர்மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகளை பிரதமர் சந்திக்க வேண்டும். 4.ராஜஸ்தானில் பாலுக்காக மாடுகளை வாங்கியவர் பசு பாதுகாப்பு படை என்ற இந்துத்துவ வன்முறையாளர்களால் கொலை செய்ததைஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் வன்மையாக கண்டிக்கிறது. ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இப்படிக்கு மெளலவி H.சிக்கந்தர் பைஜி செய்தி தொடர்பாளர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மதுரை மாவட்டம்
புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு திருச்சி மௌலவி டாக்டர் A.ஆபிருத்தீன் மன்பஈ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆரம்பமாக இறைவசனம் மௌலவி S.அப்துல் காதர் ஹசனி அவர்கள் ஓதி துவங்கி வைத்தார்கள் வரவேற்புரை மாநில செயலாளர் மௌலவி R.M.அபூபக்கர் சித்திக் ரஷாதி அவர்கள் நிகழ்த்தினார்கள்.ஆண்டறிக்கையை மாநில பொதுச்செயலாளர் மௌலவி இப்ராஹீம் மிஸ்பாஹி அவர்கள் வாசித்தார்கள். அதன் பின்பு தேசிய பொதுச் செயலாளர் மௌலவி ஹனிஃப் அஹ்ரார் மற்றும் தேசிய செயலாளர் மௌலவி அப்துல் கஃபூர் மன்பஈ அவர்கள் புதிய மாநில நிர்வாகிகளை தேர்வு செய்வதற்க்காக எலக்சன் நடத்தினார்கள். இதில் கீழ் வரும் நபர்கள் பொறுப்பாளியாக தேர்வு செய்யப்பட்டார்கள். தலைவர்: மௌலவி A.ஆபிருத்தீன் மன்பஈ துணைத்தலைவர்: 1. மௌலவி மீரான் முஹைதீன் அன்வாரி 2. மௌலவி ஆதம் ஷஃபியுல்லாஹ் இல்ஹாமி பொதுச்செயலாளர்: மௌலவி M.S.ஷம்சுல் இக்பால் தாவூதி செயலாளர்: 1. மௌலவி j.இப்ராஹீம் மிஸ்பாஹி 2. மௌலவி k.அரசத் அஹமது அல்தாபி பொருளாளர்: மௌலவி R.M.முஹம்மது அபூபக்கர் சித்திக் ரஷாதி மாநில செயற்குழு உறுப்பினர்கள்: 1. மௌலவி செய்யது முஹம்மது உஸ்மானி 2. மௌலவி அப்துல் காதர் ஹசனி 3. மௌலவி முஹம்மது நாஃபி 4. மௌலவி நூர் முஹம்மது ரியாஜ் தாவூதி 5. மௌலவி முஹம்மது யஹ்யா தாவூதி 6. மௌலவி தமீமுல் அன்சாரி காஷிபி 7. மௌலவி செய்யது இப்ராஹீம் உஸ்மானி 8. மௌலவி முஹம்மது பைசல் மக்தூமி இந்த பொதுக்குழுவில் கீழ்காணும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம்:1 வக்பு வாரியத்தை முறைப்படுத்த வேண்டும். வக்பு சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். வக்பு வாரியத்திற்கு சேர்மன் நியமனம் செய்யவேண்டும்.என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் பல்வேறு போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடத்தி வருகின்றது ஆனால் இதுவரையிலும் தமிழக அரசு ஒரு முயற்சியை கூட எடுக்கவில்லை என்பது வேதனையான ஒன்று.வக்பு வாரியம் குறித்த முஸ்லிம்களின் கோரிக்கையை நடைமுறைப்படுத்த தமிழக அரசு உடனடியாக முன்வரவேண்டும். தீர்மானம்: 2 தமிழக நலனில் அக்கரை காட்டாமல் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வரும் மத்திய, அரசை கண்டிக்கிறோம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப் புறத்தையும் நாசக் காடாய் மாற்றிய வர்தா புயல் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றது தமிழக அரசு பிரதமரை சந்தித்து ஆயிரம் கோடி தமிழகத்திற்கு நிவாரணமாக தேவை கோரிக்கை வைத்தது ஆனால் அதற்க்கான முழுமையான எந்த ஒன்றையும் மத்திய அரசு வழங்க வில்லை விவசாயிகள் தங்களது வாழ்வாதார பிரச்சனைகளை முன்னிறுத்தி 22 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றார்கள் அனால் பிரதமர் அவர்களை முகம் கொடுத்து கூட பார்க்காமல் புறக்கணித்து வருகின்றார் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டு வருகிறார்கள் இதனை கண்டித்து மத்திய அரசு சரியான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்து வருகின்றது இதுபோன்று தமிழக நலனில் அக்கரை காட்டாமல் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வரும் மத்திய, அரசை கண்டிக்கிறோம். தீர்மானம்: 3 பாபர் மசூதியை கட்டி எழுப்புவதே நீதி! 500 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் அடையாள சின்னமாகவும் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமாகவும் விளங்கி வரும் பாபர் மசூதி பாசிச பயங்கரவாதிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது அப்போதைய காங்கிரஸ் அரசால் நியமனம் செய்யபட்ட லிபர்ஹான் கமிஷன் 18 வருடம் கழித்து அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி உட்பட 67 நபர்கள் இந்த பாதக செயலுக்கு காரணம் என சொல்லியது ஆனால் அவர்கள் தண்டிக்கப்படவில்லை. முஸ்லிம்கள் நீதி மன்றத்தில் நீதியை எதிர்பார்த்தார்கள். அடுத்து 2009 ம் ஆண்டு செப்டம்பர் 3௦ ம்தேதி அலகாபாத் நீதி மன்றம் முஸ்லிம்களின் பூர்வீக சொத்தான பாபர் மசூதி நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பங்கை முஸ்லிம்களிடத்தில் கொடுத்தது அப்போதும் இந்த முஸ்லிம்கள் உச்ச நீதி மன்றத்தை நாடி நீதியை எதிர் பார்த்தார்கள் ஆனால் இப்பொழுது நீதி மன்றம் நீதிமன்றத்திற்கு வெளியே இந்த பிரச்சனையை பேசி தீர்த்து கொள்ள சொல்வதில் என்ன அர்த்தம் உள்ளது என்பது புரிய வில்லை இத்தகைய அறிவிப்பு தேசத்தின் நீதியை அவமதிக்க கூடியதாக மாறிவிடும் எனவே உரிய நீதியை உச்ச நீதி மன்றம் வழங்க வேண்டும் லிபர்ஹான் சுட்டிக்காட்டிய குற்றவாளிகள் தண்டிக்கபடவேண்டும். தீர்மானம் -4 நமது இந்திய தேசம் பன்முகத்தன்மை கொண்ட மதசார்பற்ற அரசியலமைப்பு கொண்ட தேசம் இந்த தேசத்தில் வாழும் அனைவருக்கும் அவர்களன் விரும்பிய அடிப்படையில் மதத்தை பின்பற்ற ஷரத்து எண் 25 கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஆனால் அந்த சுதந்திரத்தை பறிக்கும் விதத்தில் மத்திய அரசு முஸ்லிம்களின் ஷரியத் சட்டமான முத்தலாக் விஷயத்தில் மூக்கை நுழைப்பது கண்டனத்திற்குரியது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், மதசார்பற்றதன்மைக்கு எதிராகவும் செயல்படுவது தேசநலனிற்கு எதிரானது, தேசவளர்ச்சிக்கு எதிரானது எனவே மத்திய அரசு இத்தைகைய செயல்பாட்டினை விட்டுவிட்டு தேசத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தவேண்டுமென கேட்டுக்கொள்கின்றது. தீர்மானம் – 5 விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு இந்தியாவின் முதுகுதண்டே விவசாயம் இன்றைய நமது உணவும்,நாளைய நமது சந்ததிகளின் உணவும்,விவசாயத்தின் மூலமே கிடைக்கப்பெறுகின்றது அத்தகைய விவசாயத்தை அழிக்கும் விதத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் மீத்தேன் எரிவாயு திட்டம் என விவசாயத்தையும்,விவசாய நிலத்தயும்நாசமாக்கும் பல்வேறு திட்டத்தை நடைமுறைப்படுத்த எத்தனித்து வருகின்றது இதனை கண்டித்தும்,விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றது இத்தகைய போராட்டத்தை முழுமையாக வரவேற்பதுடன் இமாம்ஸ் கவுன்சில் ஆதரவையும் தெரிவித்து கொள்கின்றது மேலும் தமிழக நலனில் அக்கறையுள்ள அனைத்து கட்சிகளும் அமைப்புகளும்,ஆதரவையும்,ஒத்துழைப்பையும் வழங்குமாறு இந்த பொதுக்குழு கேட்டுகொள்கின்றது. மேற்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் மாநில செயலாளர் மௌலவி K.அர்ஷத் அஹமது அல்தாபி நன்றியுரை நிகழ்த்தினார்கள். இப்படிக்கு: மௌலவி A.R.செய்யது முஹம்மது உஸ்மானி மாநில செய்தி தொடர்பாளர் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு